வெள்ளை வான் (White Van)







கொடிய மரணத்தை 
தலையணைகளின் மேல் வைத்து 
நிலத்தில் நெளியும் தீயின் புகை
கண்ணீரில் உறைந்த முகத்தின் சிதிலத்தில்
அழுவது குறித்து கவலையிடாது சிலைகளாய் எழுகிறது

யுத்தம் நெரித்த குரல் வளையிலிருந்து
மீட்சிக்கான சத்தம் முதுமரமாய் துளிர்த்து
நெடுமூச்சுடன் உடல்களாய் நகர

கடத்தல்களுடன்
சித்ரவதைகளுடன்
வன்புணர்வுகளுடன்
இரப்பை பசித்திருந்த அம்பாந்தோட்டை அரசனின்
வெள்ளை வானிலிருந்து
மணி இலையான்கள் கலைகின்றன.

இங்கு ஒரு சாட்சி வெள்ளை வானிலிருந்து கலைகின்றது
நாறிய உடலிலிருந்து துகள்களைளைத் தூக்கிச் செல்கிறது

இரத்தம் சொட்டும் உடலில் அவகாசமில்லாது
ஊரத் தொடங்கும் வேட்கையின் பாடல்
வழி நெடுக மூச்சு விடத் திணற

மரண நெடுவாடை அதீதமாய் சுழலும்
கொலைக் களத்தில்
நான் அழுவது குறித்து கவலையிடாத
நீங்கள்
புதையுண்ட எனது எலும்புகளின்
சொற்களை
கவிதைக்கு சேர்க்க.


-அகரமுதல்வன்

நன்றி -கலகம் இதழ்

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்