Posts

Showing posts from June, 2017

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

Image
“முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்” தமது கூர்மையான ராஜதந்திரத்தை புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும்                   சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தியிருக்கிறார்கள். சர்வதேச             பெளத்த வெசாக் தினநிகழ்விற்கான இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின் மூலம் சிங்கள                       ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும்  அரசியலர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவழியைச்     சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைப்பதனூடாக இலங்கை- இந்திய உறவென்னும்             அரூபத்திற்கு தங்க முலாம் பூசியிருக்கிறது மைத்திரிபால                   சிறிசேன அரசு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்கு  சென்ற இந்தியாவின் பிரதமர் அந்த வரலாற்று துயரம் குறித்த சிறுசொல்லைக்கூட எங்கும் உதிர்க்க்கவில்லை. காலம் காலமாக       இந்திய எதிர்ப்புவாதத்தின் பேரால் சிங்களர்களால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனையை தற்போதைய இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை என்பதையா மோடியின் இந்த மவுனம் உணர்த்துகிறது? ஈழத்தமிழரின் வலியையும் வேதனையும்             புர