Posts

Showing posts from November, 2017

ஜெயமோகனுடைய அங்கீகாரத்தையோ பாராட்டையோ எதிர்பார்த்து நான் எழுதவரவில்லை – தமிழ்நதி

Image
நேர்கண்டவர் - அகரமுதல்வன்  உங்களின் பார்த்தீனியம் நாவல் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் தவிர்க்கப்படமுடியாதது. அந்தநாவலின் காலம் மிகமுக்கியமானது. அந்தக் காலத்தைநினைத்துஎழுதுவதுரணமாக இருந்திருக்குமல்லவா ? ஆம். என்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தது போல , ஒரு நாவலை எழுதுவதென்பது நிகழுக்குச் சமாந்தரமாக இன்னொரு வாழ்வினை வாழ்வதாகும். பார்த்தீனியத்தைப் பொறுத்தவரை ,   என்னுடைய சொந்த அனுபவங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் கூடுதல்வலியைஉணர்ந்தேன்.சிலசமயங்களில் , ஞாபகங்களின் உக்கிரம் தாங்காமல் எழுதுவதைநிறுத்திவிட்டுஎழுந்திருக்கவேண்டியிருந்தது. பொதுவாக , இரத்தம் தோய்ந்தவரலாற்றைஅடிப்படையாகக் கொண்டுஎழுதுவதேஒருவகைவாதைதான். புலம்பெயர்ந்துஉழலும் வாழ்வுபற்றிநீங்கள் ஏன் இன்னும் எழுதவில்லை ? எழுதவில்லைஎன்றுசொல்வதற்கில்லை. எனதுசிறுகதைகள் , கவிதைகள் , கட்டுரைகள் , நாடகங்களில் புலம்பெயர் வாழ்வுபற்றிஎழுதியிருக்கிறேன். இனிவருங் காலத்தில் , அந்தஅனுபவங்களைநாவலாகஎழுதஉத்தேசித்துள்ளேன். புலிகளின் இராணுவவீழ்ச்சிக்குபிறகு  இன்றுநிலவும் அரசியல் சூழலை , ஈழ அரசியல் எவ்