Posts

Showing posts from April, 2015

சடங்கார்த்தமான ஆண் கவிதைகளை மீறும் படைப்பு - குட்டி ரேவதி

Image
பெரும்பாலான ஆண் கவிஞர்களின் படைப்புகள் சலிப்பைத் தருகின்றன , அவர்களின் தொகுப்புகள் சுய நொய்மையின் பக்கங்களாக இருக்கின்றன. அல்லது அழகியலின் உபாசகனாக இருக்கின்றன. அப்படியான அழகியலுக்கும் அவர்களின் நிலக்காட்சிக்கும் தொடர்பே இருக்காது. உயிர்வாழும் சமாதிகளான அவர்களின் கவி குருக்கள் வகுத்த எல்லைகளைத் தாண்டி ஒரு சொல் கூட வெளியேறாமல் அதையே காவல் காக்கிறார்கள். “ எங்களை அரசியல் எழுதச்சொல்லாதீர்கள் , அரசியல் எழுதுபவன் கவிஞன் அல்லன் ” என்று குழந்தைகளாகி அடம்பிடிப்பார்கள். சொற்களை உற்பத்தி செய்யாமல் , காலங்காலமாக எழுதப்பட்டதையே வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவெளிக்குள் வந்து வாள் வீசும் திராணியற்று ,  சுயவெளிக்குள்ளேயே சுயமைதுனம் செய்து கொள்ளும் கவிதைகளும் , கவி குருக்களின் முதுகினை சொறிந்து கொடுத்துக்கொள்ளும் கவிதைகளுமே நிறைந்து இருக்கின்றன.  குறிப்பாக , மனித வாழ்வின் அறம் பற்றிய எந்தத் தன்னுணர்வும் இன்றியே சொற்களும் படிமங்களும் விரயம் செய்யப்படுகின்றன.    கவிதைத்தொகுப்பின் வெளியீட்டுச் சடங்கார்த்தம் துக்கத்தைக் கொண்டாடுவதாகவே இருக்கிறது. மாறாக , பெண்கள

வலிபெருத்தலும் மற்றொன்றும்

மண்ணுள் நீள்விக்கும் ஓலத்தின் குடலில்  ஒரு நிலைத்த தகிப்பின் அணிவகுப்பு என்னை நோக்கி வளைகிறது மெய்யான போர்க்குணத்தின் இளைப்பாறல் என் முகமெங்கும் ஊடறுக்கும் ஒப்பனைச் சிரிப்பு இரத்தம் குடியிருக்கும் அமைதியின் ஊற்றில் சொந்த வனத்தின் தோட்டாக்கள் பொழிந்தபடி பளபளக்கிறது மூர்க்க மோதல்களில் தசைகள் எரிக்கும் சூடான சூரியன் என்னுடன் நடக்கிறது தலைபிளந்த ஆயுதங்களில் காலத்தின் முழுமை புலப்படாது கவிதையைப் போல பிணங்களை ஆராதிக்கும் தீவு என்னைச் சூழ்ந்துள்ளது எந்தப் பொழுதும் அழுகிப்போன துயரத்தின் மேன்மையில் நாடற்றவனாய் வாழ்கிறேன் நாடற்றவனாய் எழுதுகிறேன் நாடற்றவனாய் திமிருகிறேன் எத்தனையோ இரவுகள் நெருப்பாகவே இருக்கிறது நெருப்பினூடாயே அணைகிறது. நன்றி - கணையாழி ஏப்ரல்.2015