Posts

Showing posts from June, 2018

தேர்

Image
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்  நாடு பெரிதென்று வாழுங்கள் –வே .பிரபாகரன் தமிழ்தேசியர்களே ஒன்றுகூடுங்கள்! யாழ்பாணத்தின் தென்மராட்சி பகுதியில் இருக்கும் ஊரான வரணி வடக்கு அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயில் தோரோட்டத்தில் நடந்திருக்கும் தீண்டாமை என்கிற சமூக குற்றத்தை நினைத்தால் அருவருக்கிறது.ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களும் சேர்ந்து கோவிலின் தேரை இழுத்துவிடுவார்கள் என்பதற்காக பக்கோவை வைத்து நகர்த்தியிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஒடுக்கும் உயர்குடி சமூகம்.எத்தனையோ அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்தது மட்டுமில்லமால் பெரியளவிலான இனப்படுகொலையை எதிர்கொண்டும் ஈழத்தமிழர்களிடம் இவ்வாறான சாதியவேறுபாடுகளும்,தீண்டாமைக் குற்றங்களும் இருக்கிறதென்றால் நாம் சிங்கள இனவாதிகளிடம் இருந்து விடுதலையை அடையமுடியாது. தேசியத்தின்  பிரக்ஞையால் ஒன்றுதிரண்டு போராடிய ஒரு செம்மார்ந்த இனத்தின் சாதியப்பிளவுகளும்,அதன் தீண்டாமைக் கொடூரங்களும் இவ்வாறு மீண்டும் துளிர்விடுமாயின் நாம் தேசவிடுதலையை மட்டுமல்ல சமூக விடுதலையையும் அடையமுடியாது.இந்தத் தீண்டாமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழ