Posts

Showing posts from January, 2018

“பான் கீ மூனின் றுவாண்டா” ஈழத்துப் போரியல் வாழ்வின் வலியை நேரே அனுபவிக்க முடிகிறது.-கானா பிரபா

Image
ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழு த்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை.  இம்முறை “பான் கீ மூனின் றுவாண்டா” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழகத்தின் கிழக்குப் பதிப்பகம் வழியாக வெளிவந்த பின்னர் அதை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் எழ முக்கிய காரணமே அந்தத் தலைப்புத் தான். பின்னர் இந்தச் சிறுகதைகளை வாசிக்க முன்னர் ஆர். அபிலாஷ் வழங்கிய கச்சிதமான முன்னுரை தான் அகரமுதல்வனின் எழுத்தின் நிறத்தைக் காட்டியது. சொல்லப் போனால் இந்தச் சிறுகதைத் தொகுதியை முழு மூச்சில் வாசித்து முடிப்பதற்கும் ஆர்.அபிலாஷின் சிறப்பானதொரு பகிர்வே காரணியாயிற்று. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை முற்போக்கு எழுத்தாளர் காலத்தில் இருந்து வாசித்து வருபவன். 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட "விண்ணும் மண்ணும்" என்னும் சிறுகதைத்தொகுதி யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), ச

பான் கீ மூனின் ரூவாண்டா: ஒரு ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டம் - ஆர்.அபிலாஷ்

Image
கூட்டத்தில் கண்ணில் படும் பெண் முகங்களில் ஒருசில மட்டும் அழகானவையாய் படும் . அந்த அழகு முகங்களில் ஒன்றிரண்டு மட்டுமே நம்முடன் தீராத ரகசியமொன்றைப் பேசும் . அகரமுதல்வனின் மொழி அப்படியானது . வாக்கிய அமைப்பைப் பொறுத்தமட்டில் அவர் லஷ்மி சரவணகுமாரை வெகுவாய் நினைவுபடுத்துகிறார் . உதாரணத்துக்கு கீழே வரும் மேற்கோள்களைப் பாருங்கள் : ” பந்தயத்தின் விதிகள் தெரியாமல் மைதானத்தில் இறக்கி விடப்பட்ட கடிவாளக் குதிரை போன்று ஆடைகள் நீங்காத அவளின் மார்புகளையே பார்த்துக் கொண்டிருந்தான் . அகதியானவள் பிசைந்து கொடுக்கும் சோற்றை அவன் விழுங்கி சாப்பிட்டான் . இருவருக்குமிடையில் மூட்டம் போலொரு வாசம் உருண்டது .” ( பெயர் ) “ இரவின் திரையில் கொக்குகள் எழுந்து பறக்கையில் வெண்பஞ்சுகள் வெடித்து அலைவதை போலிருந்தது .” ( முயல்சுருக்கு கண்கள் ) “ மானின் கொம்புகளாய் தருணங்கள் வளர்ந்தன . மிகச்சிக்கலான சாயலில் இருவருக்குமிடையில் பிரபஞ்சம் தோகை விரித்தது .” ( முயல்சுருக்கு கண்கள் ) லஷ்மி சரவணகுமார் கவிதையின் மிக மிக சன்னமான