Posts

Showing posts from September, 2015

மகிந்தவின் அதிகாரத் தோல்வி தமிழர்களின் அரசியல் பின்னடைவு – அகரமுதல்வன்

தமிழீழர்கள் மீதான இனப்படுகொலைக்கு பிறகான காலத்தில் கொழும்பில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு அரசியல்,அதிகார மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அனுகூலங்களும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஜனவரி 8 ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த அடைந்த தோல்வியானது நேரடியான பகைவுணர்வில் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருந்தாலும் அது அரசியல் ரீதியான பாதகமான முடிவாக மாறிவிட்டது. அரசியல் என்பது பல்வேறு சுழியோடித்தனங்கள் கொண்ட கூர்மையான நடவடிக்கை என்பதை தமிழர் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நடந்த அதிபர் தேர்தலில் தமது ஆதரவை மைத்திரி அணிக்கு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளால் மைத்திரியை வெற்றியடையச் செய்தது. எந்தவொரு சிங்களரை கொழும்பு அரசியலில் வெற்றியடையச் செய்வதன் மூலமாயும் தமிழர்களுக்கு தீர்வு வந்திடப்போவதில்லை என்பதை தமிழ் தலைவர்கள் கடந்த கால வரலாறுகளின் வழி பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மகிந்த அதிபராக நீடிப்பதன் ஊடாக சர்வதேச ரீதியில் தமிழர்கள் பக்கம் இருந்த ஆதரவையும் நீதி கோரும் தீர்மானங்களையும் மிக லாவகமாக நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம் எ

புதிய மனம் புதிய எண்ணம் புதிய சிந்தனை - இனப்படுகொலைக்கு பின் களமும், சர்வதேசமும்

இனவாதம் என்பது வெறும் நபர்களிடம் தங்கி   நிற்பதல்ல அரசு எந்திரத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இனமொன்றின் கூட்டு உளவியலில் தினம் தினம் புதிய பரிமாணங்களை தன்னகத்தே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.சிங்கள இனவாதமும் கொழும்பு ஆட்சியாளர்களும் தமிழர்கள் மீது நிகழ்த்திய படுகொலைகளானது கட்சி பேதங்களைத் தாண்டிய ஒற்றுமையில் நிகழ்த்தப்பட்டது. கல்ஓயா தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து நடாத்தபட்ட இனப்படுகொலையில் இருபெரும் பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டுமே பங்குவகித்தன  என்பது உலகறிந்த உண்மை.  கொழும்பின் கூட்டு உளவியலில் தமிழர்கள் மீதான வெறுப்பும் அழித்தொழிப்பும் அவர்களின் அரசியலை தக்க வைக்க உதவுகிறது. அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு செவி சாய்க்காத தமது கடந்த கால தலைவர்களின் வழியை பின் தொடரும் இன்றைய சிங்களத் தலைமைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்த தத்தமது பங்குகளைப் போட்டி போட்டு அறிவிக்கும் சூழல் இப்போது தான் அதிகரித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் இராணுவத் தோல்வியோடு தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முடிந்து போய்விட்டதாக சிங்களத் தலைவர்கள் எண்ணுவதைப் போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எண்ணுகிறத