மனித நாகரிகம் தன்னுடைய லட்சிய மேன்மையை அடைய விடாமல் தடுக்கும் வாழ்வியல் அம்சங்களுள் முதன்மையானது போர் . போரின் அழிவாற்றல் அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் தமிழகவாழ் தமிழர்களுக்கு போரின் குரூரங்களோடு நேரடி அனுபவம் இல்லை . இது ஒரு நல்வினை . சக தமிழினம் அண்டை நாட்டில் தன்மானப் போரிட்டு அழிந்ததை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அரைகுறையாய் அறிந்து வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நாம் . போரின் குரூர முகத்தை , போருக்குப் பிந்தைய வன்முறையின் அவலங்களை நாம் சென்ற நூற்றாண்டிலோ தொடர்ந்து வரும் இந்த நூற்றாண்டிலோ அனுபவித்ததில்லை . இதனால் போர் இலக்கியங்கள் பற்றிய புரிதல் நமக்கு சற்றுக் குறைவாகவே இருக்கிறது . போர் ஏற்படுத்தும் அழிவின் ஆவணங்கள் நமக்கு எந்தப் படிப்பினையையும் கொடுப்பதில்லை . என்ற போதிலும் போருக்குப் பிந்தைய உபவிளை பொருளாக நமக்குக் கிடைப்பது போரைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் . “ உலக வரலாற்றில் போர்கள் அனுபவமாகியிருக்கும் பெரும்பான்மை நாடுகளிலும் உன்னதமான போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளன . நாடுகளுக்கிடையிலான போர்கள் மட்டுமன்றி அதே அளவிலான உக்கிரத்துடன் உலகெங்கிலும் நடைபெற்ற பல மூர்க்கத்த
Comments
Post a Comment