எங்கே எனது வீடு





எங்கிருந்தோ உருண்டோடி வந்த
பாறை
உள்ளங்கை மீறி ஓடும் 
நதியின் நடுவில் 
வீழ்ந்து தாழ்வதாய்
கீழிறங்குகிறது
தனிமையின் அடர்த்தி
குருட்டு மொழியில் உயிர் சுமக்கும்
கவிதைகளின் சொற்கள்
தூரம் சென்று திரும்பி வர மறுப்பதாய்
நினைவுகள் நீண்ட சுவர்களுக்கு
பூச்சிட மறுக்கின்றன
வண்ணங்கள் வெளுத்த வானவில்கள்.
அந்தியொழுகும் வானத்தின் மீது
விரக்திகள் கல்லெறிய
துரிதமாய் சுருங்கியது சூரிய பலூன்.
தினமும் எரிவதாய்
காத்திருப்பை பிரவகிக்கும்
வனாந்தரக் குரல்
காயமுற்ற ஒரு நிழலாய்
சாளரம் நோக்கி எழுந்து வருகிறது
எங்கே எனது வீடு.

-அகரமுதல்வன்
05.04.2014


நன்றி -கல்கி 

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்