Posts

Showing posts from January, 2015

மகிந்த -மைத்திரி – அமெரிக்கா

இனவாத உளவியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களிடம் நிலவி வருகின்ற ஒற்றுமை,உடன்பாடுகள் போன்றவை அவர்களிடம் ஆழவேரூன்றிப் போய் கிடக்கும் படுகொலைச்சிந்தனையிலிருந்து உருப்பெற்றவை. அங்கு வாழும் சிறுபான்மை மக்கள் மீது வரலாறு நெடுக அடக்குமுறைகளை நிகழ்த்தி இலங்கைத்தீவு ஒரு பவுத்த நாடு – அது சிங்களர்களுக்கே சொந்தமானது என நிறுவ முயலும் சிங்களத் தலைவர்களின் குரல்கள் ஓரினத்தன்மை கொண்ட ஆட்சியை வலியுறுத்துவதாக மட்டுமே அமைந்திருக்கிறது. இந்த இனவாதக் கோட்பாட்டின் நவீன ஆட்சியாளராகவிருந்து இனப்படுகொலையினை நிகழ்த்திய மகிந்த இனப்படுகொலைக்கு பின்னராக நிகழ்ந்த இரண்டாவது தேர்தலில் தோல்வியுற்றமை பல்வேறு நெருக்கடிகளை தமிழர்களின் அரசியல் நகர்வுகளில் ஏற்படுத்திவிட்டது என்று உறுதியாக நம்பமுடியும். வெறுமென மகிந்தவிற்கு எதிரான நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு அளித்த ஆதரவே இன்று மகிந்தவை தோல்வியடைய செய்திருக்கிறது. தமிழர்களின் வாக்குகளே மைத்திரியை  வெற்றியடைய செய்திருக்கிறது என்றாலும்  தன்னை வெற்றி அடையச் செய்த தமிழர்களுக்கு மைத்திரி எதையும் செய்துவிடப்போவதில்லை. தமிழர்களின் அரசியல் சக்தியாக

என் நிழல்கள்

உனதழகு சக்தி வாய்ந்தது  குளிர்கொண்ட வெய்யிலை கொத்துகிறது  எப்போதும் போல கண்சிமிட்டி சுழல்கிறது  ஆதிக் குணத்தில் கற்பனை நுழைக்கிறது தளும்பும் படிகளில் கசியுமென் தீண்டல் அலைகளை மதுவாய்,மலராய்,மழைகளாய் பாவிக்கிறதோ உன் மனம் நிரம்பிக்கிடக்கும் நறுமணத்தில் நனைந்தபடி கடலிருக்க நெத்தலிக் கருவாடாக்கும் அடங்கா ஆசையில் மணலெங்கும் என்னை வீசுகிறது விரிதோகை இமை பரவசம் வழியும் முகத்துடன் ஒரு கோடித் திங்களை பரிசளிக்கும் உன்னிடம் வந்து கொண்டிருக்கிறது ஒரு துண்டுப் பருவம் உன் திசைச் சுழிகளில் அகவைகள் கழிகிறது யோகமில்லாத சிறகுகளை பறத்தலுக்காய் உபயோகித்த என்னைக் கொன்றுவிடச் சொல்கிறது அறை முழுதும் ஊர்ந்து திரியும் உன் புலன்கள் என் நிழல்கள். ********************** என்பாலெழும் செல்லச் சிந்தையெங்கும் உன் வேர்விட்ட புவனம் நெடுங்கடல் பிளந்து நித்தமும் பழுக்கிறது அங்கே கலந்தெழும் என்னிடத்தே நுரை மூச்சு வீசுமடி மின்னிய காற்றின் இதழ் சேரும் திருவுருவத் தீக்குழியில் கானல் அந்தம் மயங்குமடி பாம்பென நெளிந்த பொழுதில் வேம்பென பரந்து தோன்றி பொழில் நனைந்த குறிகள் எங்கும் குளிர்ப்பூக்கள் நெருங்கிப் பெருக்கும் சிணுக்கம்